வாடிப்பட்டி தாலுகாவில் 1332 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 6 March 2024

வாடிப்பட்டி தாலுகாவில் 1332 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார் பாக  ஏழை, எளியோர், மாற்றுத் திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங் கைகள் உள்ளிட்ட 1332 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வரவேற் றார். இந்த நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா ஆணைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார். அப்போது அவர்கூறியதாவது:- கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. மேலும் தி.மு.க பொறுப்பேற்றவுடன் அன்று முதல் இன்று வரை மக்களின் நலனில் முழு அக்கறை காட்டி ஒவ்வொரு திட்டங்களையும் செயல் வடிவங்களாக மாற்றி செய்யப்பட்டு வருகிறது.


அரசு அதிகாரிகளை தேடி மக்கள் சென்ற நிலை மாறி இன்று மக்களை தேடி அதிகாரிகள் வந்து மனுக்களை பெற்று மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் நலனில் அக்கறை கொண்டு மகளிர் சுய உதவிக்குழுகடனுதவி, இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை என்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 5ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது அதிலும் சோழவந்தான் தொகுதியில் மட்டும் அதிக அளவு1332 அவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார். 


இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் மு பால்பாண்டியன், சோழவந்தான் எஸ் எஸ் கே ஜெயராமன் தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன் பசும்பொன்மாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்தி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அயூப்கான், நிர்வாகிகள் மு பிரகாஷ் சிபிஆர் சரவணன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் மூர்த்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad