மாநில அளவிலான கராத்தே போட்டி காரியாபட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 8 February 2024

மாநில அளவிலான கராத்தே போட்டி காரியாபட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.


மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில், மியாகி வேர்ல்டு கோஜு ரியூ கராத்தே பள்ளியின் சார்பாக மாநில அளவிலான  கராத்தே போட்டி நடைபெற்றது. இதில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செயின்ட் மேரிஸ் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பு பரிசுகளை பெற்றனர். போட்டியில், கபிலேஷ்,  கௌசிக்குரு, பவித்ரன், ஜஸ்வன் ஆகியோர் முதல் பரிசையும் சிவ பிருந்தா, யுவன் ராஜ், ஜெய் ராம், ஹேமந்த் ஆகியோர் இரண்டாம் பரிசையும் தருண் கார்த்திக்,  சாய் ஜெயஸ்ரீ,  முத்து குரு, முகமது இஸ்மாயில், முகம்மது ஜுனைத், ஆதேஷ், கையூம், யஸ்வந்த் கீர்த்தீஸ் ஆகியோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கீதா, பள்ளியின் முதல்வர்  இமாகுலேட், மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளியின் தலைவர் வைரமணி, தலைமை பயிற்சியாளர் ராஜா, பயிற்சியாளர் அஜய், உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad