மதுரையில், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 22 February 2024

மதுரையில், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.


6. அம்ச கோரிக்கைகளைவலியூறுத்தியும், மத்திய அரசு பாஜக  கண்டித்தும், மதுரையில் சோசியல்டெமாக்ரடிக்  டிரேட் யூனியன் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விவசாய விலைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது, நடத்தம் தாக்குதலை உடனே நிறுத்து. விவசாயிகளின் கடன்களையும் வழக்குகளையும் தள்ளுபடி செய்  விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்று, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்காதே,   தொழிலாளர் விரோத 4. தொகுப்பு சட்டங்களை திருப்பப் பெறு, மக்களை வதைக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திருப்பப் பெறக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில், மத்திய அரசு மற்றும் பாஜக அரசைக் கண்டித்து, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே, ஆட்டோ ஓட்டுனர் அதன் வடக்கு மாவட்ட தலைவர் நிஸார் , தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில பொதுச்செயலாளர் என். ரவூப் நிஸ்தார் சிறப்புரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.பி .கட்சி மற்றும் தொழிற் சங்கங்கள் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad