மதுரை பகுதி கோயில்களில் பிரதோஷ விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 22 February 2024

மதுரை பகுதி கோயில்களில் பிரதோஷ விழா.

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், பிரதோஷ விழா நடைபெற்றது. மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேச திருக்கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் திருக்கோவில், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், முத்து மாரியம்மன் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம்,  வர சித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்கிய விநாயகர் கோவில், சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயமான சிவன் ஆலயம், திருவேடகம் ஏடகநாதர்  சுவாமி ஆலயம், தென்கரை மூலநாத சுவாமி ஆலயம், துவரிமான், திருமங்கலம் மீனாட்சி சுந்தரர் திருக்கோவில், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரர் கோவில், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் கோயில், மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, இத் திருக்கோயில் அமைந்துள்ள நந்திகேஷ்வரர் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

சோழவந்தான் சிவன் ஆலயத்தில், பிரதோஷத்தை முன்னிட்டு ,இத்த திருக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரன் மற்றும் காசி லிங்கத்துக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி, கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


இந்த நிகழ்ச்சியில், தொழில் அதிபர் எம் .வி. எம். மணி, கவுன்சிலர்கள் மருது பாண்டியன், வள்ளி மயில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பிரதோஷ விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad