இந்த நிலையில், நேற்று வழக்கம்போல மது அருந்திக் கொண்டிருந்தபோது, மது போதை அதிகமாகி, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு கைகலாப்பாக, அந்த நேரம் சித்தப்பா பெரியகருப்பன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதில், தலையிலும் உடலிலும் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டு அய்யர் பாண்டி மயங்கி விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அய்யர் பாண்டியை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே அய்யர் பாண்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த எழுமலை காவல் நிலைய போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
அண்ணன் மகனைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டு, தப்பி ஓடிய சித்தப்பா பெரியகருப்பனை தற்போது தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment