திருமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள சாத்தங்குடி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 22 February 2024

திருமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள சாத்தங்குடி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமமான சாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரெங்கம்மாள் திருக்கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நேற்று காலை கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று சுமார் 10.30மணிக்கு திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் சிவாச்சாரியர்கள் சீனிவாசன் பட்டர் குழுவினர்கள் கோவில் கலசத்திற்கு புண்ணிய நீர் ஊற்றினார்கள். இவ் விழாவில் பக்கத்து கிராமத்தில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ரெங்கம்மாளை தரிசனம் செய்தனர் தீர்த்தங்கள் தெளிக்கபட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகமிட்டியினர் செய்திருந்தார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad