மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில், தண்டவாள பராமரிப்பு காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டதால், நேற்று காலை முதல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சோழவந்தான் பகுதியில் இருந்து வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரயில்வே கேட் பகுதியை பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக, சோழவந்தானில் திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலமும் ஒரு சில நிர்வாக காரணங்களால் முழுமையாக பயன்பாட்டிற்கு வராததால், தற்போது வரை சோழவந்தான் பகுதி பொதுமக்கள் இந்த ரயில்வே கேட் பகுதியை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நேற்று காலை முதல் ரயில் வேகேட்டை மூடி பராமரிப்பு பணியை ரயில்வே ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் ரயில்வே கேட்டை ஆபத்தான முறையில் தாண்டி சென்றனர்.
இதனால், ரயில்கள் வரும்போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது ஒரு பகுதியில் மட்டும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. மற்றொரு பகுதியில் ரயில்கள் சென்று வந்தன. இதனால், நேற்று காலை முதல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment