திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் அவதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 7 February 2024

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் அவதி.


திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மின்வாரியம் முன் அறிவிப்பின்றி மின்தடை செய்வதால் இம்மருத்துவமனையில் ஏதாவது ஒரு பகுதியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று எக்ஸ்ரே பிரிவில் பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வரிசையில் காத்திருந்தனர் அப்போது மின்தடை ஏற்பட்டதினால் நோயாளிகள் தவித்தனர் இதனால் ஜெனரேட்டரை இயக்குமாறு அவர்கள் கூற உடனடியாக இயக்க முடியாது என மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.

25 நிமிடங்கள் கழித்து ஜெனரேட்டரை இயக்கி எக்ஸ்ரே எடுத்து அனுப்பினர் இதனால் நோயாளிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது தவிர்க்க முடியாத காரணத்தினால் மின் தடை ஏற்படும் பட்சத்தில் முன்னரே மருத்துவமனைக்கு மின்வாரியம் தகவல் தெரிவிக்க வேண்டும் மின்தடை ஏற்பட்டவுடன் தானாக ஜெனரேட்டர் இயங்கும் வசதியும் செய்யப்பட வேண்டும். இதனால் மின்வாரியத்துறைக்கு மருத்துவமனை சார்பாக முன் அறிவிப்பு இன்றி மின்தடை செய்ய கூடாது நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தானியங்கி ஜெனரேட்டர்கள் இருக்க வேண்டும் என்று கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad