சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், அறிவியல் கண்காட்சி ஏராளமான பெற்றோர்கள் பார்வையிட்டனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 10 February 2024

சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், அறிவியல் கண்காட்சி ஏராளமான பெற்றோர்கள் பார்வையிட்டனர்.


மதுரை மாவட்டம், சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், பெற்றோர்கள் உட்பட பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் இக்கண்காட்சியை கண்டு களித்தனர். இந்த கண்காட்சி நிகழ்ச்சியை, எம் .வி. எம் .குழுமத் தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிர்வாகி, கவுன்சிலர் வள்ளிமயில் முன்னிலை வகித்தார்.

பள்ளியின் தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் அறிவியல் கண்காட்சியை,  குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார். இந்த அறிவியல் கண்காட்சியை, பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அருகில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். இப்பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக அறிவியல் கண்காட்சியில், தங்களது படைப்புகளை செய்திருந்தனர். 


பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன், சிறப்பாக செய்திருந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளியின் அனைத்து துறை ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், உதவி தலைமை ஆசிரியை தீபா ராகினி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad