இந்த நிலையில், பலமுறை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தெற்கு வாசலில் இருந்து விமானம் நிலையம் செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பகுதியில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான அனைத்து பகுதிகளும் நிறைவடைந்த நிலையில், பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யாததால், சாலை அமைக்கும் பணி தாமதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை அண்ணாநகர் மேலமடை தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெருவில், குழாய் பதிக்க தோண்டும் போது, குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு, பல மாதங்களாக சீர் செய்யாமல் பல வீடுகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரவில்லையாம். இது குறித்து இப்பகுதியில் குடியிருப்போர் கூறியது: தாசில்தார் நகர், வீரவாஞ்சி தெருவில் உடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க, உதவிப் பொறியாளரை சந்தித்து முறையிட்டும், குழாய்களை மாற்ற கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதியினர் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment