சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 7 January 2024

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு.


மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தேனூர் கிராமத்தைச் சேர்ந்த தாவூத் மகன் அஸ்லாம் வயது 27. இவர் மதுரை அருகே உள்ள பரவை மார்க்கெட்டில்  லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். இவர், இன்று மாலை வேலை முடித்து தேனூர் கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியில் சென்ற பொழுது குளிக்கச் சென்ற அஸ்லாம் நீரில் மூழ்கினார்.

இதனால், கிராம மக்களும் போலீசாரும் வைகை ஆற்றில் அஸ்ஸலாமை  தேடினர். அப்பொழுது, அஸ்லாமை பிணமாக மீட்டனர். இதுகுறித்து, சோழவந்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிணத்தை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  குளிக்கச் சென்ற சிறிது நேரத்தில் அஸ்லாம் வைகை ஆற்றில் மூழ்கி இறந்தது  கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே, மேல கால் மற்றும் குருவித்துறை, திருவேடகம் ஆகிய வைகை ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து குளிக்க சென்ற சிறுவர்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது. ஆகவே, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது, ஆற்றில் குளிக்க குளிக்க யாரும் அனுமதிக்க கூடாது என்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ,சமூக ஆர்வலர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad