திருமங்கலம் அருகே ஆண் சிசு சாவு தாயிடம் விசாரணை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 18 January 2024

திருமங்கலம் அருகே ஆண் சிசு சாவு தாயிடம் விசாரணை.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பன்னி குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சக்கா 35 இவரது கணவர் 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் பச்சக்காவிற்க்கு18 வயதில் மகனும் 15 வயதில் மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் பச்சக்கா கர்ப்பமானார் கிராமத்தில் பொதுமக்கள் கேட்டபோது வயிற்றில் கட்டி இருப்பதாகவும் என்று கூறி சமாளித்து விட்டார். ஜனவரி 15 இல் அவருக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது பச்சகாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டதால் குழந்தையை வீட்டில் வைத்துவிட்டு சாத்தங்குடி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சென்றார். குழந்தை  குறித்து டாக்டர்கள் விசாரித்த போது தனக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்ததாகவும் அதனால் அதை கண்மாயில் புதைத்து விட்டதாகவும் முதலில் கூறியிருந்தார் குழந்தை தனது வீட்டிலேயே இறந்து கிடப்பதாகவும் கூறினார். 


இதனால் அவர் மேல் சந்தேகப்பட்ட டாக்டர்கள் சிந்து பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் விஏஓ இராமச்சந்திரன் பச்சக்கா வீட்டிற்க்கு சென்று பார்த்தபோது ஆண் குழந்தை இறந்த நிலையில் ரத்தக் கசிவுடன் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பதை பார்த்தனர் ஒரு இரும்பு தட்டில் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad