கள்ளிக்குடி அருள்மிகு சங்கிலி கருப்பசாமி திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 24 January 2024

கள்ளிக்குடி அருள்மிகு சங்கிலி கருப்பசாமி திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வில்லூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சங்கிலி கருப்பன் சுவாமி திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ அன்னை பராசக்தி காளியம்மன் திருக்கோவிலில் கடந்த திங்கட்கிழமை அதி காலை 5 மணி அளவில் கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு நான்கு காலமாக யாக பூஜைகள் நடைபெற்றது. 


இன்று காலை 9 மணி அளவில் கோவிலின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்து அபிசேகங்களும் நடந்தேறியது. இந்த கும்பாபிஷேக விழாவிற்க்கு பக்கத்து கிராமத்தில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகமிட்டியினர் செய்திருந்தார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad