திருமங்கலம் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் 75-வது குடியரசு தின விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 26 January 2024

திருமங்கலம் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் 75-வது குடியரசு தின விழா.


ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் சங்கத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது! விழாவிற்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் துணை தலைவர் இரா.வெங்கிடகிருஷ்ணன் தலைமை வகித்தார்! வட்டக்கிளையின் தலைவர் ஜனாப் கே.மஹபூப்பாட்சா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்! விழாவில் பங்கேற்று அனைவரும் "வந்தேமாதரம்! வந்தேமாதரம்! ஜெய்ஹிந்த் என விண்ணதிர முழக்கமிட்டு தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர்! நிகழ்ச்சியில் குடியரசின் சிறப்பு பற்றியும், போராட்டத்தில் பங்கைற்ற தலைவர்கள் பற்றியும் அப்துல்கனி, பாண்டி, பிலாவடியான், காசிராஜன் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் .என்.நடராஜன், ஆர்.பாலகிருஷ்ணன், எம்.நடராஜன், ரகுநாதன் மற்றும் மூத்த உறுப்பினர்கள் .பொன்னையா,மதலை முத்து, ஆதிமூர்த்தி, கன்னையா, எம்.ஜி.முருகேசன், யூசுப் கான்,வாசு, சிக்கந்தர், ராஜேந்திர போஸ்,.பிரேமாராணி, பாண்டிச்செல்வி, தமிழ் குழலி, மீரா பாய், பகவதி மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad