சொகுசு காரில் தீவிபத்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய தம்பதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 2 December 2023

சொகுசு காரில் தீவிபத்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய தம்பதி.


திருமங்கலம், தென்காசி அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்தவர்  சொரிமுத்து (வயது 35). இவர் உளவுத்துறை போலீசாராக ஆலங்குளத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய தந்தை கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னுடைய தந்தையை பார்ப்பதற்காக காரில் தன்னுடைய குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்றார். செல்லும் வழியில் கள்ளிக்குடி சிவரகோட்டை இடையே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது காரின் முன் பக்கம் இன்ஜினில் இருந்து புகை வந்தது வந்தது. உடனடியாக காரை நிறுத்தினார். 

கார் நிற்கும் முன் கண் இமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில் சுதாரித்து கொண்ட சொரிமுத்து காரில் உடன் வந்த மனைவி மற்றும் குழந்தைகளை காரில் இருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு  உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad