மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மதுரை மாவட்டம். சேடபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான மொக்கத்தான் பாறை குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏழு மாணவ மாணவியர்களை தங்கும் விடுதிகளில் சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும் பெற்றோர்களுக்கு 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் உடனடியாக பணி வழங்கவும், மகளிர்களுக்கு மகளிர் சுய உதவி குழு ஏற்படுத்தி பயிற்சிகள் வழங்கி பின்பு வங்கி கடன் உதவி வழங்கிடவும், ஆதார் எண் உடனடியாக வழங்கிடவும், வீட்டு மனைபட்டா மகளிருக்கு வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முகாமில் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment