திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 20 December 2023

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது, தென் மாவட்டங்களை புரட்டி போட்ட மழையின் காரணமாக திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் வீடுகளுக்குள் போய்விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளநிவாரணமாக அரிசி, காய்கறிகள், துணிகள், உணவு பொருட்கள், ஆகியவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், சங்கர் கைலாசம் அவர்களின் தலைமையில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad