மதுரை அருகே, சோழவந்தான், திருவாலவாய நல்லூர் ஊராட்சியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர். நடராஜகுமார் திருமங்கலம் உதவி இயக்குநர் டாக்டர். ரவிச்சந்திரன் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர். ஜான் சுரேஷ் தாசன் டாக்டர். திருநாவுக்கரசன் டாக்டர் .சுரேஷ் ஆகியோருடன் கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் இதர சேவைகள் அளித்தனர்.
முகாமை, ஊராட்சி மன்றத் தலைவர் சகுபர் சாதிக் துவக்கி வைத்தார். முகாமில், நல்ல முறையில் கன்றுகளை வளர்த்த மூன்று பயனாளிகள் மற்றும் நல்ல முறையில் மாடுகள் அதிகம் வளர்த்து வரும் மூன்று பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment