உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் 44 வது பட்டமளிப்பு விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 18 December 2023

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் 44 வது பட்டமளிப்பு விழா.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருள் ஆனந்தர் கல்லூரியின் 44வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அன்பரசு வரவேற்று பேசினார். கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம், செயலாளர் அந்தோணிசாமி வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தர்மராஜ் பங்கேற்று, 577 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில், கல்லூரி தலைவர் அந்தோணி சிங்கிதாஸ், பட்டம் அளிப்பு உறுதிமொழியை கூற, மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழியை ஏற்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, கல்லூரி தேர்வு ஆணையாளர் ஜெபாஸ்டீன் மகிமைராஜ் மற்றும் பட்டமளிப்பு விழாவின் ஒருங்கிணைப்பாளர் கில்பர்ட் ராணி ஆகியோர்கள் செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில், முன்னாள் மாணவர் ஹேன்றி லியோநாடு நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad