மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில், 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதே போல, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வர திருக்கோவில், மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் திருக்கோவில், மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோவில், மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், சித்தி விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயம், மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், மதுரை வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயம், மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் திருக்கோவில், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் கார்த்திகை சோமவார்த்தை முன்னிட்டு, சிவன் மற்றும் அம்பாளுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதை தொடர்ந்து, அபிஷேகம் நடைபெற்றது.
இதை அடுத்து, பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ,ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment