மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக, தென் மாவட்டத்தில் தொடரும் தேவேந்திர குல வேளாளர் படுகொலைகளை கண்டித்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தேவேந்திர குல வேளாளர் மக்கள் தனியாக ரயில்வே வேலைக்கு செல்ல முடியவில்லை, ஆடு மாடு மேய்க்க கூட செல்ல முடியவில்லை காரணம் உயிருக்கு பாதுகாப்பில்லை என, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், இனிவரும் காலங்களில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்கவும், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் நலனை பாதுகாத்திட வேண்டும் என, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் ,மாவட்ட செயலாளர் மானகிரி பாலன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட த்தலைவர் கதிரேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஞ்சித் பாண்டி, சிவக்குமார் மற்றும் முத்துப்பாண்டி, தமிழ், செல்வகுமார், சின்ன ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment