உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 27 November 2023

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக மற்றும் சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்து செல்வி, சதீஷ், குருசாமி மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, திருவேடகம் ஊராட்சி செயலாளர் ராஜா என்ற பெரிய கருப்பன் சங்கங்கோட்டை சந்திரன், மாரிமுத்து, ரவி, மில்லர், தகவல் தொழில் நுட்ப அணி ஆதி.பார்த்திபன் உள்பட வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad