உசிலம்பட்டி, அருகே முறைகேட்டை கண்டித்து எம்.எல்.ஏ. போராட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 27 November 2023

உசிலம்பட்டி, அருகே முறைகேட்டை கண்டித்து எம்.எல்.ஏ. போராட்டம்.


செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைகேட்டை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் கிராமம் ஆதிதிராவிடர் காலணியில், நாடக மேடை கட்டுவது தொடர்பாக முறைகேட்டை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்.எல்.ஏ. பொதுமக்களை திரட்டி ஈடுபட்டார். ஊராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இரண்டு நாளில் முறையாக விசாரித்து ஆவண செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 


பின்பு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். ரூபாய் 10 லட்சம் நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் இணைந்து ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் முறையாக நாடக மேடை கட்டி தராவிடில், மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad