மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பழமையான கட்டிடங்கள் காய்கறி மார்க்கெட் அதில் மக்களுக்கு ஏற்ற வகையில் போதிய இடவசதி இல்லாததால் அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டலாம் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் 2கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருமங்கலம் மக்களின் நீண்டகால கனவுஆன ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் துவங்க பட உள்ளது.
No comments:
Post a Comment