ஊரக உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 1 November 2023

ஊரக உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் தேதியில் ஊரக உள்ளாட்சி தினம் கொண்டாடுவது வழக்கம்.அந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். அதன் அடிப்படையில் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான தி.புதுப்பட்டியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் முனியம்மாள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில் முக்கியமான தீர்மானங்கள் ஆன குடும்ப தலைவிகளுக்கு 1000ரூபாய் சிலபேருக்கு வரவில்லை என்று குடும்ப பெண்கள் கூறினர் மற்றும் பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டது, இக்கூட்டத்தில் APO Housing DRDA வெங்கடேசன், சானிடேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் T.இளவரசி கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சி செயலர் தாமரை செல்வி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் திரளி, பன்னிக்குண்டு, காண்டை ஆகிய கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad