மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (01.11.2023) கீழ்க்கண்ட விளைபொருட்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டது.
- சாப்டூரை சேர்ந்த ஒரு விவசாயியின் 513 கிலோ மக்காச்சோளமானது கிலோ ஒன்றிற்கு உச்ச விலையாக ரூ 23.50 க்கு கேட்கப்பட்டு ரூ12050/- க்கு விலை போனது.
- குன்னத்தூரை சேர்ந்த ஒரு விவசாயியின் 51 கிலோ உளுந்து கிலோ ஒன்றிற்கு உச்ச விலையாக ரூ 98/-க்கு கேட்கப்பட்டு ரூ 4998/-க்கு விலை போனது.
- விருதுநகர் மாவட்ட காரியபட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 623 கிலோ கருப்பு கவுனி கிலோ ஒன்றிற்கு உச்ச விலையாக ரூ41.50க்கு கேட்கப்பட்டு ரூ 25854/- க்கு விலை போனது.
- புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயினுடைய 50 கிலோ பாசிப்பயிரானது கிலோ ஒன்றிற்கு உச்ச விலையாக ரூ93க்கு கேட்கப்பட்டு ரூ 4650/- க்கு விலை போனது.
- புதுக்கோட்டை மாவட்ட கந்தவர்கோட்டை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 243 கிலோ திணையானது கிலோ ஒன்றிற்கு உச்ச விலையாக ரூ54க்கு கேட்கப்பட்டு ரூ 13122/- க்கு விலை போனது.
- தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயினுடைய 161 கிலோ பாசிப்பயிரானது கிலோ ஒன்றிற்கு உச்ச விலையாக ரூ91க்கு கேட்கப்பட்டு ரூ 14681/- க்கு விலை போனது.
- வாகைகுளம் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயினுடைய 91கிலோ துவரையானது கிலோ ஒன்றிற்கு உச்ச விலையாக ரூ60க்கு கேட்கப்பட்டு ரூ 5460/- க்கு விலை போனது.
- விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த ஒரு விவசாயினுடைய 498 கிலோ கம்பானது கிலோ ஒன்றிற்கு உச்ச விலையாக ரூ26க்கு கேட்கப்பட்டு ரூ 12948/- க்கு விலை போனது.
- மேலும் வாடிப்பட்டியைச் சேர்ந்த மூன்று விவசாயிகளின் 14790கிலோ ஜோதிமட்டை நெல் ஆனது ராமநாதபுரம் வியாபாரி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா மாநில காலடிக்கு அனுப்பப்படுகிறது. 68 கிலோ நெல் மூடையானது அதிகபட்ச விலையாக 1570 க்கும் குறைந்தபட்சமாக 1530/-க்கும் கேட்கப்பட்டு 334782/- க்கு விலை போனது.
ஆக இன்று மொத்தமாக ரூ 428544/- க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை 9025152075 லும் மேற்பார்வையாளரை 9600802823 லும் சந்தை பகுப்பாளரை 8754379755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment