திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 25 November 2023

திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் வட்டக் கிளையில் 23 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் எஸ்.எம்.பி திருமண மஹாலில் சங்கத் தலைவர் K.மஹபூப் பாஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்த ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியர்கள், குடும்ப ஓய்வூதியதார்களுக்கு நாலு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கு சென்னையில் மட்டும் இலவச டோக்கன் வழங்கும் சலுகை திட்டத்தை மறு வருஷம் செய்து தமிழக முழுவதும் அரசு பேருந்தில் பயணம் செய்யும் ஓய்வூதியர்களுக்கு 50% விழுக்காடு கட்டண சலுகை வழங்க வேண்டும். 


அதேபோல் திருமங்கலத்தில் கப்பலூரில் செயல்பட்டு வரும்  சுங்கச்சாவடி பொதுமக்களின் நலன் கருதி நிரந்தரமாக நீக்கி அரசு உத்தரவிட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் 80 வயது முதல் 95 வயது நிறைவடைந்த மூத்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சென்னை வேணுகோபால், துணைத் தலைவர் வெங்கடகிருஷ்ணன், வாழ்த்துரை வழங்கியவர்கள் ராமானுஜம், தீர்மானங்கள் முன்மொழிதல்எம்.நடரஜன், வையத்துறை, ரகுநாதன், மற்றும் செயலாளர் N. நடராஜன் பொருளாளர் பாலகிருஷ்ணன், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad