வெவ்வேறு விபத்துக்களில் விவசாயி-பெட்டிகடைக்காரர் பலியானார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 4 October 2023

வெவ்வேறு விபத்துக்களில் விவசாயி-பெட்டிகடைக்காரர் பலியானார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் ராம சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 23). இவர் மேலக்கோட்டை அவுசிங்போர்டு குடியிருப்பில் வசித்து வருகிறார். அங்குள்ள தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் சென்றார். செங்கப்படை விலக்கு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.


அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி காவேரி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூடலிங்கம். அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையின் எதிரே உள்ள ஓட்டலுக்க சாப்பிட சென்றார். பின்னர் கடைக்கு வருவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது ஒரு வாலிபர் வேகமாக ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கூடலிங்கத்தின் மீது மோதியது.


இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உறவினர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பலியானார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad