மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 18 July 2023

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.


மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 (மேற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில்  இன்று  (18.07.2023) நடைபெற்றது.    

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில், உள்ள மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல்  12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி விதிப்பு வேண்டி 22 மனுக்களும் , காலிமனை வரி  வேண்டி 3  மனுக்களும், பாதாளச்சாக்கடை  வசதி  வேண்டி 5 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 5  மனுக்களும்,  குடிநீர் வசதி வேண்டி  10 மனுக்களும் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 8 மனுக்களும் சாலை வசதி வேண்டி 15  மனுக்களும் தெருவிளக்கு வசதி வேண்டி 4  மனுக்களும் இதர கோரிக்கைகள் தொடர்பாக 3 மனுக்களும்  என, மொத்தம் 75 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து  மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது.   


தொடர்ந்து,  மண்டலம் 3 வார்டு எண்.75 வெங்கடஜலபுரம் பகுதி அரிசி ஆலை அருகில் புதிதாக அமைக்கப்படும் பாலத்தின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை சீரமைப்பது குறித்தும்  மேயர் ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 


இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன் மண்டலத் தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, கண்காணிப்பு பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் தயாநிதி, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்  மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி செயற் பொறியாளர் சேகர்  சுகாதார அலுவலர் விஜயகுமார் உதவி  பொறியாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad