கற்போரை கண்டுபிடித்தல் தன்னார்வலர்களைகண்டறிதல் மற்றும் கற்போர் மையங்கள் அமைத்தல் வழிகாட்டி நெறிமுறைகளுக்கான சிறப்பு கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 23 June 2023

கற்போரை கண்டுபிடித்தல் தன்னார்வலர்களைகண்டறிதல் மற்றும் கற்போர் மையங்கள் அமைத்தல் வழிகாட்டி நெறிமுறைகளுக்கான சிறப்பு கூட்டம்.


பள்ளி  சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரதஎழுத்தறிவு திட்டம் 2023..2O24 ஆண்டிற்கான கற்போரை கண்டுபிடித்தல் தன்னார்வலர்களைகண்டறிதல் மற்றும் கற்போர் மையங்கள் அமைத்தல் சார்ந்து வழிகாட்டி நெறிமுறைகளுக்கான சிறப்பு கூட்டம் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்   கா. கார்த்திகா  தலைமையில் மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று 23.6.23 நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட  மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை தொடக்க நிலை மற்றும் தனியார் பள்ளிகள்) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர்கள் அனைத்து ஒன்றியங்களை சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் என சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள எழுதப் படிக்க தெரியாதவர்lகள் எண்ணிக்கையில் 2022..23 ஆண்டில்  முதல் கட்டமாக 18762 கற்போர்கள் தெரிவு செய்யப்பட்டு 934 மையங்கள் மூலம் எழுதப் படிக்க கற்றுத் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும்  (2023-2024) சென்ற ஆண்டு போல இரண்டாம் கட்டமாக 18762 எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கண்டறியப்பட்டு 934 மையங்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்பட உள்ளனர் என்பது சிறப்புக்குரியது.

No comments:

Post a Comment

Post Top Ad