மாலை பணியை முடித்த பின்பு பேருந்தின் ஸ்டேரிங்கை முத்தமிட்டு தொட்டு வணங்கி பின் பஸ்ஸில் படிக்கட்டு வழியாக படிக்கட்டு மற்றும் பேருந்தின் முன்புறம் தொட்டு வணங்கி கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அழுதார்.


தனது 30 ஆண்டு கால சேவையில் மிகவும் நேசித்தது டிரைவர் தொழில் தான் என்றும் தனது தாய் தந்தையாருக்கு பின் இந்த தொழிலை உயிராக நேசித்தேன் என்றும் இந்த தொழில் முலம் தான் தனக்கும் மனைவி குழந்தைகள் கிடைத்தது என்பதில் பெருமை கொள்கிறேன் என்று பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் வருத்தத்துடன் செல்கிறேன் என முத்துப்பாண்டி கூறினார்.
தனது பணிக்காலத்தில் பயணிகள், பொதுமக்களிடம் நல்ல முறையில் பழகியவர் என முத்துப் பாண்டியை சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஒட்டுனர் முத்துப்பாண்டியின் வீடியோ தற்போது வைரலாக வருவது பாரவையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
No comments:
Post a Comment