இருவேறு விபத்தில் 2 பேர் பலி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 5 June 2023

இருவேறு விபத்தில் 2 பேர் பலி.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது76). இவர் நேற்று வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்று விட்டு பின்னர் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். 

திருமங்கலம் அருகே உள்ள காட்டுபத்திர காளியம்மன் நான்கு வழிச்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சுப்புராமனை அங்கிருந்த வர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிக்சை பலனின்றி சுப்புராமன் பரிதாபமாக இறந்தார்.  


திருமங்கலம் அருகே உள்ள பல்லக்காபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிலம்பரன்(21). இவர் கடந்த 24-ந்தேதி மோட்டார் சைக்களில் வெளியே புறப்பட்டார். திருமங்கலம் - சோழவந்தான் சாலையில் உள்ள பேக்கரி அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சிலம்பரசனை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமாகவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். 


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார். இந்த இரு விபத்துகள் குறித்தும் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

No comments:

Post a Comment

Post Top Ad