அவர்களது வேன் இன்று அதிகாலை 4.45 மணியள வில் மதுரை மாவட்டம் திருமங்கலம் மேலக் கோட்டை அருகே வந்தது. அப்போது நான்கு வழிச்சாலை தடுப்புசுவரில் வேன் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த வளர்மதி, ராஜ் குமார், ஷாலினி, விஜய குமார், சரோஜாதேவி, குழந்தைகள் காதம்பரி, நித்திலன் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.


படுகாயமடைந்த வளர்மதி உள்ளிட்ட 7 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து காரண மாக நான்குவழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment