
அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து தனது வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தன்னுடைய வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு போனது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் வீட்டில் புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்கள் யார்?உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூர் கொள்ளை கும்பலா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். பூட்டியிருந்த வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment