கள்ளழகா் ஆற்றில் இறங்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 14 April 2023

கள்ளழகா் ஆற்றில் இறங்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது. விழாவைத்தொடா்ந்து, முக்கிய விழாவான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், திக்குவிஜயம் மே 1-ந்தேதியும், திருக்கல்யா ணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதி யும், கள்ளழகருக்கு எதிர் சேவை மே 4-ந்தேதியும் நடைபெற உள்ளது. 

இதைத் தொடா்ந்து, மே 5-ந்தேதி அதிகாலை கள்ள ழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடை பெற உள்ளது. வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் இடமான ஆழ்வாா்புரம் பகுதியில் செய்யப்ப உள்ள தூய்மைப்பணிகள், முன்னேற்பாட்டு பணிகள், பந்தல் அமைத்தல், மணல் திட்டு ஏற்படுத்துதல், தண்ணீா் நிரப்புதல், கேலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை கள்ளழகர் கோவில் நிர்வாகத்தினர் இன்று ஆய்வு செய்தனர். 


இந்த ஆய்வில் கள்ளழகர் கோவில் இணை ஆணையர் ராமசாமி மற்றும் அற நிலையத்துறை, கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad