அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டவை. மாணிக்கம்தாகூர் எம்.பி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 21 April 2023

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டவை. மாணிக்கம்தாகூர் எம்.பி.


மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல உப்பிலிக்குண்டு, கூடக்கோவில், டி.கொக் குளம், தும்பக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:- நூறுநாள் வேலை திட்டம் கிராம மக்களுக்கு முக்கியமான திட்டமாகும். மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு நிதியை குறைத்து வருகிறது. 

இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப் படுவார்கள். கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.முக.-பா.ஜ.க. கூட்டணி கட்டாயத்திற்கான கூட்டணி ஆகும். இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. தரம் தாழ்ந்த அரசியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார். ராகுல் காந்தி பதவி நீக்கம் தொடர்பான வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும், நியாயம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


உடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் எஸ்.ஓ.ஆர்.இளங்கோவன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, பழனிக்குமார், காமாட்சி முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வட்டார தலைவர்கள் பாண்டியன் தளபதிசேகர், காசிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகவதி உலகாணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சவுந்திரபாண்டி, மாணவர் காங்கிரஸ் விஜய்தீபன், இளைஞர் காங்கிரஸ் வித்யாபதி வினோத்ராஜா, சுந்தரபாண்டி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad