எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது பாடுபடுவோம். ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தீர்மானங்களை நிறைவேற்றினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 22 April 2023

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது பாடுபடுவோம். ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தீர்மானங்களை நிறைவேற்றினார்.


மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனி சாமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக, அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. 

அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி கீழ்க்கண்ட தீர்மானங் களை நிறைவேற்றினார். அ.தி.மு.க. இயக்கத்தின் 28 ஆண்டுகாலம் பொதுச் செயலாளராக பொறுப் பேற்று அம்மா பல்வேறு சாதனைகளை உரு வாக்கி காட்டினார்கள். அவரது மறைவிற்குப் பிறகு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடியார் முதன் முதலாக மதுரைக்கு வருகிறார். 



அவருக்கு அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படு கிறது.  கட்சியின் பொன்விழா ஆண்டையொட்டி, ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்த, பொதுச் செயளாலர் எடப்பாடி யாருக்கு அம்மா பேரவை யின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியாரை முதல்- அமைச்சராக அரியணையில் அமர்த்திட அயராது உழைத்திட அம்மா பேரவை, மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. வீர சபதம் ஏற்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் பி.சரவணன், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad