மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட டி.வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவரது 17வயது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும், விசாரித்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து மகளை கண்டு பிடித்து தருமாறு தாய் கருப்பாயி கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment