மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா: மூன்றாம் நாளான இன்று அம்மன் பட்டாபிஷேக அலங்காரத்தில் காட்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 28 September 2022

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா: மூன்றாம் நாளான இன்று அம்மன் பட்டாபிஷேக அலங்காரத்தில் காட்சி.


உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதமும் விழாக்கள் கொண்டாடப்படும். அதிலும் நவராத்திரி உற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றது. நவராத்திரி உற்சவ விழா செப்டம்பா் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கியது. 


இந்த விழா அக்டோபா் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மூன்றாம் நாள் விழாவான இன்று, அம்மன் பட்டாபிஷேகம் அலங்காரத்தில் சிறப்பாக காட்சியளித்தார். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. கொலு மண்டபத்தில்   (உற்சவர்) அலங்காரத்தில் எழுத்தருளிய அம்மனை பக்தர்கள் திரளாக வந்து வணங்கி சென்றனர்.  


மேலும், கொலு அலங்கார பொம்மைகள்  சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலுச்சாவடியில் கொலுவாக வைத்திருந்தனர். திரளான பக்தர்கள் அம்மனையும், சுவாமியை தரிசனம் செய்து கொலு வையும் பார்த்து ரசித்து சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad