மதுரை சிக்கந்தர்சாவடியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ஜோதி பாசு கத்தியால் குத்தி படுகொலை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 17 July 2024

மதுரை சிக்கந்தர்சாவடியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ஜோதி பாசு கத்தியால் குத்தி படுகொலை.

 


மதுரை சிக்கந்தர்சாவடியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக  ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ஜோதி பாசு   கத்தியால் குத்தி படுகொலை.



மதுரை மாவட்டம் அதலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜோதிபாசு அங்குள்ள, ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் தலைவராகவும்,  விஜயகுமார் செயலாளராகவும் உள்ளனர். சங்கத்தில் உறுப்பினர் சேர்ப்பதில் தொடங்கி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி  ஆட்டோ சங்க பிரச்சனையில் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோதிபாசு தனது ஆட்டோவில், சிக்கந்தர் சாவடி பகுதியில்  சென்று கொண்டிருந்தார். அப்போது  ஆட்டோவை வழி மறித்த 
விஜயகுமார் ஜோதிபாசுவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார் 


இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சொல்லும் வழியில் ஜோதிபாசு   உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார் கொலையாளி  விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad