இருட்டில் மிதக்கும் மகாத்மா காந்தி நகர் ) கண்டுகொள்ளுமா வடகரை ஊராட்சி ஒன்றியம் ?? - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 2 June 2024

இருட்டில் மிதக்கும் மகாத்மா காந்தி நகர் ) கண்டுகொள்ளுமா வடகரை ஊராட்சி ஒன்றியம் ??

 


இருட்டில் மிதக்கும் மகாத்மா காந்தி நகர் ) கண்டுகொள்ளுமா வடகரை ஊராட்சி ஒன்றியம் ??



திருமங்கலம் வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட சுங்குராம்பட்டியை அடுத்துள்ள புளியங்குளம் விளக்கில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நகர் அருகில் தனியார் கல்லூரியும் தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது இந்நிலையில் மகாத்மா காந்தி நகர் பகுதியில்  நாளுக்கு நாள் வீடுகளும் 15 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் இன்னும் தெரு விளக்கு வசதி கூட இல்லாமல் சிரமப் படுகிறார்கள் அப்பகுதி  மக்கள் .. தெருவிளக்கு வசதியை ஏற்பாடு செய்து கொடுக்குமா வடகரை ஊராட்சி ஒன்றியம்???
அங்கு வசிக்கும் பொதுமக்கள் ஆசிரியர் மற்றும் அரசுத் துறையை சேர்ந்த பலரும் வசிக்கின்றனர் இப்பகுதியில் வேலைக்கு சென்று வரும் பெண்களிடம் சாலையில் அமர்ந்திருக்கும் மது பிரியர்கள் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இப்பகுதியில் தெருவிளக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும் என அப்பகுதி பொதுமக்கள் நம்புகின்றன ... மழைக்காலம் வந்தால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் குண்டும் குழியுமாக உள்ள பாதையில் தான் சென்று வரும் சூழல் உருவாகிறது எனவே அப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கிறார்கள் அதற்கும் ஒரு முடிவு கிடைக்குமா வடகரை ஊராட்சி ஒன்றியம் சாலை வசதி செய்து கொடுக்குமா??? மற்றும் புளியங்குளம் விளக்கிற்கு ஒரு நிழற்குடை அமைக்க வேண்டும் .. அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்...

No comments:

Post a Comment

Post Top Ad