நீர் மோர் பந்தல் நிறைவு விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 2 June 2024

நீர் மோர் பந்தல் நிறைவு விழா:

 


நீர் மோர் பந்தல் நிறைவு விழா:


மதுரை அருகே,சோழவந்தானில், அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் நிறைவு நாள் நிகழ்ச்சியானது, ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன் நீர்,மோர் வழங்கினார்.



தமிழகத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையிலும் பொதுமக்களை கோடை வெப்பத்திலிருந்து, பாதுகாக்கும் வகையிலும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர்மோர்பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டதன் பேரில், மதுரை புறநகர் மேற்கு ,மாவட்ட செயலாளர் ஆர். பி .உதயகுமார்  சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக மற்றும் சோழவந்தான் பேரூர்  சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி நிர்வாகிகள் சார்பாக பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி வந்தனர். இன்று நிறைவு நாளாக 40 வது நாள் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார். இதில் ,பேரூராட்சி செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம். கே. முருகேசன்,மகளிர் அணி நிர்வாகிகள் லட்சுமி,வனிதா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், சண்முக பாண்டியராஜா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, மற்றும் வார்டு செயலாளர் மருது சேது, மணிகண்டன், எஸ்பி மணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ், மன்னாடிமங்கலம் தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி, ராமு,இளைஞர்ணி தண்டபாணி  , பேரூர் துணை செயலாளர் தியாகு அசோக், ஜூஸ் கடை கென்னடி,அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் சக்திவேல், மகாலிங்கம், பி ஆர் சி நாகராஜ், வெடிகுண்டு ராசு, பேட்டை மாரி ராஜா சுரேஷ், கண்ணன், முத்துக்குமார், பாலா, மன்னாடி மங்கலம் சுரேஷ், முத்துப்பாண்டிஉட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad