காரியாபட்டி பாண்டியன் நகர், அருள்மிகு மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 1 June 2024

காரியாபட்டி பாண்டியன் நகர், அருள்மிகு மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா


 மாரியம்மன் கோயில், பொங்கல் விழா.


காரியாபட்டி பாண்டியன் நகர், அருள்மிகு மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது . விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன்  நகர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண கணபதி மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கப் பட்டது . தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். 7ம் தேதி காலை பால்குடம் அபிஷேகம், மாலை குத்து விளக்கு பூஜை நடை பெறும். 9ந் தேதி சக்தி கரகம் எடுக்கப் பட்டு பொங்கல் வைபவம், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெறவுள்ளது. விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, பொதுமக்கள் மற்றும், விழா குழுவினர் செய்து வருகிறார்கள் .

No comments:

Post a Comment

Post Top Ad