மழையால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுப்பை நடத்தி வரும் அரசு விரைவாக நிவாரண இழப்பீடுகளை வழங்க வேண்டும் கிராமம் தோறும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 23 May 2024

மழையால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுப்பை நடத்தி வரும் அரசு விரைவாக நிவாரண இழப்பீடுகளை வழங்க வேண்டும் கிராமம் தோறும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும்


மழையால் பாதிக்கப்பட்டவர்களை  கணக்கெடுப்பை நடத்தி வரும் அரசு விரைவாக நிவாரண இழப்பீடுகளை வழங்க வேண்டும் கிராமம் தோறும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் 




தமிழகத்தின் உரிமை காப்பதில் அரசு கள்ள மவுனம் ஜீவாதார பிரச்சனைகளின் கேள்விகளுக்கு அமைச்சர் நகைச்சுவையாக பதில் அளிக்கிறார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி.



கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாள் முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சுந்தரகுண்டு கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கண்ணன் தலைமை நடைபெற்றது.



அன்னதானத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், வக்கீல் திருப்பதி ,வக்கீல் தமிழ்ச்செல்வன், மாநில நிர்வாகிகள் புளியங்குளம் ராமகிருஷ்ணன், வெற்றிவேல், தனராஜன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமசாமி, செல்லம்பட்டி ராஜா, பிரபு,ராமையா, மாவட்ட அணி நிர்வாகிகள் செல்லம்பட்டி ரகு, சிங்கராஜ பாண்டியன், சரவணபாண்டி, பேரையூர் ராமகிருஷ்ணன்,சிவசக்தி,
சிவரக்கோட்டை ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்



ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது
தமிழகத்தின் பல பகுதிகளை பரவலாக கோடை மழை பெய்து வருகிறது ,கோடை மழை தற்போது வரை 16 சதவீதம் அதிகரித்துள்ளது.



குறிப்பாக தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் கன மழை பதிவாகி மதுரை, கன்னியாகுமரி  திருநெல்வேலி,தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர்உள்ளிட்ட மாவட்டங்களின் மே 22 வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான மழை பதிவாகியுள்ளது.



வெள்ளம் ஏற்பட்டு விளை பொருள்கள் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது  சேதம் அடைந்த  பயிர்களுக்கான இழப்பீடு வழங்க உடனடி  கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.



ஆகவே இந்த கணக்கெடுப்பு முடிந்து உடனடியாக காலத்தால் செய்த உதவி என்ற அடிப்படையிலே  இந்த பயிர்கள் சேதம் அடைந்து உயிராக வளர்க்கப்பட்ட பயிர்கள் எல்லாம் வீணாகி கண்ணீரிலே இன்றைக்கு விவசாயிகளுக்கு இந்த அரசு நேசக்கரமிக்குமா என்று கண்ணீரோடு காத்திருக்கிறார்கள். அவருடைய கண்ணீரை துடைப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் அதுமட்டுமில்லாதது இன்றைக்கு சாக்கடை கலந்த நீர் வருகிறது இதனால் பல்வேறு தொற்றுநோய் வாய்ப்பு உள்ளது ஆகவே கிராமங்கள் தோறும் அரசு மருத்துவமனை நடத்தி மக்களை காக்க வேண்டும்.



தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிற காரணத்தினாலே முன்கூட்டியே தொடங்கி இருக்கிற காரணத்தினாலே முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 7 லட்சம் விவசாயி குடும்பங்களும், 80 லட்சம் மக்களும் பாசனத்திற்கும் குடிநீருக்கும் நம்பி உள்ளனர் .



அந்த முல்லை பெரியார் வரலாறு எல்லோரும் அறிந்து ஒன்றுதான் இருந்தபோதும் தற்போது நான் அதை நினைவு கூறுகிறேன்  1979 முன்பாக 2.31லட்சம் ஏக்கர் பாசன பரப்பு இருந்தது.கேரளா அரசின் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 136 அடியாக குறைக்கப்பட்ட பின் தற்போது பாசனத்திற்கு பரப்பு 1.71 லட்சமாக குறைந்து விட்டது.

  

இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர் அதற்காகத்தான் நிரந்தர தீர்வுகாண  வரலாற்று சிறப்புமிக்க உரிமை மீட்பு போராட்டத்தை சட்ட போராட்டத்தின் மூலம் மீட்டு தந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி அறிவிப்பு என்கின்ற ஒரு மகத்தான அந்த சரித்திர சாதனை நிகழ்த்திய மதுரையில் நடைபெற்றது.



20.11.2014  அம்மா பெற்ற தீர்ப்பில் அணை நீரை 142 அடியாக தேக்கி கொள்ளலாம் பேபி அணையை பழுது பார்க்கப்பட்டது 152 அடியாக தேக்த்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பை பெற்று மூன்று முறை அம்மா ஆட்சி காலத்தில் 142 அடியாக தேக்கி அணை பாதுகாப்பாக என்று உறுதி செய்யப்பட்டது



இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாரின் 1500 கோடியில் புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டம் தயாரித்த போது இதன் மூலம் நமது ஜீவாதார உரிமை பறிபோகும் அதே போல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று 5 மாவட்ட மக்களின் சார்பில் தொடர்ந்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதம் நடைபெற்றன ஆனாலும் நமது உரிமை பறிபோகிறது அரசு கள்ள மவுனதுடன் இருக்கிறது இந்த மர்மத்தின் விடை எப்போது உலகம் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


திருமங்கலம் செய்தியாளர் R.வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad