மதுரையில் சாலையின் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய சார்பு ஆய்வாளர் சங்கரை பாராட்டி காணொளி வெளியிட்ட விருதுநகர் எம்பி: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 28 April 2024

மதுரையில் சாலையின் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய சார்பு ஆய்வாளர் சங்கரை பாராட்டி காணொளி வெளியிட்ட விருதுநகர் எம்பி:

 


மதுரையில் சாலையின் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய சார்பு ஆய்வாளர் சங்கரை பாராட்டி காணொளி வெளியிட்ட விருதுநகர் எம்பி:



மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்ககூடிய மறவன்குளம் சாலையில்,  பார்வையற்ற பேனா வியாபாரி சாலையில் வலிப்பு வந்து சாலையில் மயங்கி விழுந்த போது, ஆஸ்டின்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் சங்கர், அவரை அங்கிருந்து மீட்டு சென்று முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. 


இந்த நிலையில், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சங்கரை பாராட்டி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்: 

 

பேருந்துக்கு முன்பு சாலையில் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய, ஆஸ்டின் பட்டி காவல் நிலைய சார்பாய்வாளர் சங்கரின், செயல் பாராட்டுதலுக்குரியது, போற்றுதலுக்குரியது. அவருடன் தொலைபேசியில் பேசி அவருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தேன் என்று அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad