திருச்சுழி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் இறுதி கட்ட பிரச்சாரம் வேட்பாளருக்கு கிராம பெண்கள் அமோக வரவேற்பு : - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 17 April 2024

திருச்சுழி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் இறுதி கட்ட பிரச்சாரம் வேட்பாளருக்கு கிராம பெண்கள் அமோக வரவேற்பு :

 


திருச்சுழி தொகுதியில்    அதிமுக வேட்பாளர்    ஜெய பெருமாள் இறுதி கட்ட பிரச்சாரம் வேட்பாளருக்கு கிராம பெண்கள் அமோக வரவேற்பு :



ராமாபுரம் அதிமுக வேட்பாளர் திருச்சுழி தொகுதியில், இறுதி கட்ட பிரச்சாரம் கிராமப் பெண்கள் சிறப்பான வரவேற்புகொடுத்தனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டு குடிநீர் திட்டங்கள செயல்டுத்த பாடுபடுவேன்.      வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி அளித்தார்.       நரிக்குடி பகுதியில் குடிநீர் தேவையை . விருதுநகர் மாவட்டம் நரிக்குடி  ஒன்றியத்தில் கருவக்குடி, கல்விமடை, புல்வாய்க் கரை நாலூர், உலக்குடி. அழகாபுரி சாலை. இலுப்பகுளம் , நரிக்குடி இருஞ்சிறை , எஸ். வல்லக் குளம், வீரசோழன், மினாக்குளம், ஆணைக்குளம் பனையூர் உட்பட 25 க்கு மேற்பட்ட கிராமங் களில் இராமநாத புரம் அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் சுற்றுப் பயணம் செய்து, வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி  பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசும் போது: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் . நான் அன்றாடம் சந்திக்கும் . கிராம மக்களின் வாழ்க்கை நிலைமைகளை நன்கு தெரிந்தவன். மிகவும் பின் தங்கிய கிடக்கும் நரிக்குடி பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிச்சயமாக நிறை வேற்றி தர பாடுபடுவேன். இராமநாதபுரம் தொகுதியில், அதிமுகவுக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகிறார் கள்.   தமிழகத்தில் மீண்டும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி . மக்களுக்கு குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க அனைத்து கிராமங்களிலும் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க    நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில், வளர்ச்சி அடையாத    கிராம ஊராட்சிகள் மேம்பாட்டுக்காக மத்திய , மாநில அரசு திட்டங்களை கொண்டு வந்து ஊராட்சிகள் தன்னிறைவு அடைய பாடுபடுவேன். மேலும், பெண்கள் சுகாதார வளாகம், சமுதாய கூடங்கள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொகுதி அளவிலான கல்வி வழிகாட்டும் மையங்கள் மற்றும் வேலை வாயப்பு க்காக இலவச , தொழிற் பயிற்சி    மையங்கள் அமைக்க பாடுபடு வேன் திருச்சுழி தொகுதியில், நீண்ட நாட் களாக.  நிறை வேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்ட கிருதுமால் போன்ற பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை  முழுமையாக  நிறை வேற்ற பாடுபடுவேன் . மேலும், மிகவும் பின் தங்கி கிடக்கும் நரிக்குடியை தனி தாலுகா வாக மாற்ற முயற்சி செய்வேன்.  மருது சகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி பகுதியில் மருதுபாண்டியர்கள் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில்   தொழிற் பயிற்சி கல்லூரி அமைக்க ஏற்பாடு செய்வேன். மேலும், நரிக்குடி ஒன்றிய செயலாளர். அம்மன்பட்டி ரவிச்சந்திரன், பூமிநாதன், முன்னாள் எம் எல்.ஏக்கள் சிவசாமி , மணி மேகலை, கே.சி பிரபாத், சந்திரன், வழக்கறிஞர் சுப்பையா        உட்பட பலர் பங்கேற்ற னர்.

No comments:

Post a Comment

Post Top Ad