நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை பிரபாகரனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கொட்டும் முரசு சின்னத்தில் திருமங்கலத்தில் மறவன் குளம் கிராமத்தில் வாக்கு சேகரித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்று கூட நிறைவேறாத அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதை தான் சட்டமன்றத் தேர்தலில் கூறினர் ஆனால் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். ஆனால் அதிமுக அரசு எம். ஜி. ஆர், ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியில் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தேர்தலில் போட்டியிடவில்லை நிச்சயமாக உங்களின் வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட அவை தலைவர் மூ. சி. சோ. முருகன், அம்பேரவை செயலாளர் தமிழழகன், ஒன்றிய கவுன்சிலர் உச்சபட்டிசெல்வம், தேமுதிக மாவட்ட செயலாளர் கணபதி, ஒன்றிய செயலாளர் கார்த்திக், நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் தீபாசுந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கள்ளிகுடி ஒன்றியம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாக்கு சேகரித்தார்.
No comments:
Post a Comment