காந்திமதி சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காயத்ரியை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது காயத்ரிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை என உறுதி செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து காயத்ரியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு காந்திமதி அவருடைய வீட்டிலேயே வைத்து காயத்ரிக்கு கருவில் இருக்கும் பெண் குழந்தையை கருகலைப்பு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் பொழுது காயத்ரி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சட்ட விரோதமாக தான் கருக்கலைப்பு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ளஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த காந்திமதி விருப்ப ஓய்வு பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதே மாதிரி கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்தவுடன் அவற்றை கரு கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வருடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட பெண் சிசு கருக்கலைப்பு செய்திருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் காந்திமதிக்கு உதவியதாக சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் விஜயலஷ்மி என்பவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து காந்திமதியை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பெண் கருக்கொலை எனவும், பிறந்த பின் கொல்வது சிசுக் கொலை எனவும் கூறப்படுகிறது. பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் முதலாவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment