சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவிலில் சிவ பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும் அம்பாளும் ரிஷபவாகனத்தில் கோவிலை மூன்று முறை சுற்றி வந்தனர். பக்தர்கள் பின் தொடர்ந்து சிவ சிவ என்று பக்தி பரவசத்தில் கோஷமிட்டு வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.
நிரந்தரமாக பிரதோஷ விழாவை நடத்தி வரும் எம்விஎம் குழுமதலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இதேபோல் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவிலிலும் திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் கோவிலிலும்சிவ பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது
No comments:
Post a Comment