இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் திடீரென வீட்டில் உள்ள சாமி அறையில் இருந்து தீ பற்றி எறிய தொடங்கியது. இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் வீட்டிற்குள் சென்று தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்து காரணமாக வீட்டிற்குள் இருந்த ப்ரிட்ஜ், அலமாறிகள் மற்றும் பூஜை பொருட்கள் துணிகள் முழுவதுமாக தீயில் கருகி முழுவதுமாக சேதமடைந்தது. தீ பற்ற தொடங்கியதால் மாடிவீட்டில் இருந்து மின்கம்பிகளில் தீ பரவ தொடங்கிய நிலையில் தீயணைப்புத்துறையினர் மின்சார இணைப்பை துண்டித்தனர்.
குறுகலான மாடி வீடு என்பதால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் இருந்தபோதிலும் தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்குள் உள்ள சாமி அறையில் ஏற்றிவைத்த விளக்கில் இருந்து தீ ஏற்பட்டதா? பிரிட்ஜ்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக என தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
தீ விபத்தின்போது நல்வாய்ப்பாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment